பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் குப்பைகள் வாங்க தூய்மை காவலர்கள் வராததாலும், குப்பை தொட்டிகள் இல்லாததால் பொதுமக்கள் தெருவில் ஆங்காங்கே குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் காற்றில் பறக்கும் குப்பைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைகள் முறையாக வாங்குவதற்கும், அள்ளுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.