ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-09-18 14:07 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் நரிமணம் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள பஸ் நிலையத்தின் அருகில் வளப்பாற்றில் கரையின் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் குப்பைகளை கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்