கடலூர் சூரப்பநாயகன் சாவடி பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. குப்பைகளை பன்றிகள் கிலறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாநகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.