குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்.

Update: 2022-09-17 14:37 GMT

கூத்தாநல்லூர் தாலுகா, பொதக்குடியில் உள்ள தெருக்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அதனால் இந்த பகுதியில் இருந்து தெருக்களில் கொட்டப்படும் குப்பைகளும் அதிகமாக உள்ளது. ஆனால் அந்த பகுதியில் போதுமான குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குப்பைகளை தெருக்களில் கொட்டி வருகின்றனர். குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் குப்பைகள் நிறைந்து காணப்படுறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்