தீயிட்டு கொளுத்தப்படும் குப்பைகள்

Update: 2022-09-17 11:06 GMT

நாகை திருவாரூர் சாலையில் கோட்டை வாசல் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் அந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொண்டு வந்து தான் தரம் பிரிக்கப்படும். ஆனால் ஒரு சிலர் குப்பை கிடங்கில் தீயிட்டு கொளுத்திவிடுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட நுரையீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதே போல் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்