பள்ளிக்குள் புகை மூட்டம்; மாணவர்கள் அவதி

Update: 2022-09-16 14:19 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் அருகே குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குப்பை கிடங்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளில் தீ வைக்கப்படுகிறது. இதனால் எழும் புகை மூட்டம் பள்ளிக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பல்வேறு கழிவுகளில் இருந்து புகை வெளியாவதால் மாணவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே, மாணவர்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு முறையான தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்