கோவில் நிலத்தில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2022-09-16 14:14 GMT

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை உள்ள பகுதியில் பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பிலான நிலம் உள்ளது. கடந்த 40 ஆண்டுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள இந்த கோவில் நிலத்தில் தற்போது இறைச்சிக் கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கூளங்கள், இறந்தவர்கள் உயிருடன் இருந்தபோது பயன்படுத்திய மெத்தைகள், துணிமணிகள் மற்றும் பல்வேறு குப்பை கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் கோவில் நிலம் முழுவதும் புதர்கள் மண்டியும், குப்பை கழிவுகளாலும் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்துள்ளது. இவற்றை கோவில் நிர்வாகம் அகற்றிவிட்டு சுற்றிலும் முள்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்