மயிலாடுதுறை நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சித்தர்காடு ஊராட்சியில் காவிரி ஆற்றின் வடக்கு கரையில் சிலர் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் மூக்கை மூடியபடி நடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆற்றின் கரையில் குப்பைகளை அகற்றவும், குப்பைகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.