குளத்தில் கிடக்கும் குப்பை தொட்டி

Update: 2022-09-15 10:57 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆமூர் அசலிஅம்மன் கோவில் மற்றும் குளம் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டது. குப்பைத் தொட்டியை ஊழியர்கள் சரிவர பராமரிக்காததால் குப்பைத்தொட்டி குளத்தில் விழுந்து கிப்பதோடு குப்பைகள் குளத்தில் மிதக்கின்றன. குப்பை தொட்டி குளத்தில் கிடப்பதால் அப்பகுதி மக்கள் கீழேயும் குளத்திலும் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே ஊழியர்கள் குப்பை தொட்டியை பராமரித்து தினமும் குப்பைகளை அள்ளி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்