சாலையோரம் குவிந்த குப்பைகள்

Update: 2022-09-14 13:15 GMT

தென்காசி அருகே மேலகரம் பேரூராட்சி 14-வது வார்டு குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பைகளை முறையாக அகற்றாததால், அங்கு சாலையோரம் குப்பைக்கூளங்களாக காட்சி அளிக்கின்றன. மேலும் அப்பகுதியில் உள்ள அடிபம்பும் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளன. எனவே, குப்பைகளை முறையாக அகற்றவும், பழுதடைந்த அடிபம்பை சரி செய்யவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்