குப்பை தீவைத்து எரிப்பு

Update: 2022-09-13 16:31 GMT

வேடசந்தூர் வசந்தநகரில் குப்பைகளை ஓரிடத்தில் கொட்டி தீவைத்து எரிக்கின்றனர். எரியும் குப்பைகளில் இருந்து வெளியேறும் கரும்புகை குடியிருப்பு பகுதிக்கு பரவுகிறது. இதனால் முதியவர்கள், நோயாளிகளுக்கு சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினை ஏற்படுகிறது. எனவே குப்பைகள் எரிக்கப்படுவதை தடுத்து அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்