திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி நெட்டவேலம்பட்டியில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள குப்பை சேமிக்கும் தொட்டியில் குப்பைகள் மாதக்கணக்கில் அகற்றப்படாமலுள்ளன. மென்மேலும் குப்பைகள் கொட்டப்படும்போது, குப்பைகள் சிதறி சாலைகளில் வந்து சுகாதார சீர்கேடு விளைவிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.