குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-13 10:42 GMT

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் சாலையோரத்தில் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக கடைத்தெருவுக்கு வருபவர்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளில் இரை தேடி கால்நடைகள் அதிகளவில் வருகின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், தேவையான இடங்களில் குப்பைத்தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்