செண்பகராமன்புதூர் கங்கை பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகில் அந்த பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஆனால், அவற்றை முறையாக அகற்றாததால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமன், செண்பராமன்புதூர்.