நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் தாலுகா தாஜ்நகர் நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தாஜ் நகரில் இருந்து மயானம் செல்லும் சாலையில் குப்பைகள் நீண்ட நாட்களாக அள்ளபடாமல் குவிந்து கிடக்கின்றன. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணா, நாமக்கல்.