ராமநாதபுரம் நகரில் பல இடங்களில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. மேலும், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.