பொதுமக்கள் அவதி

Update: 2022-09-08 10:12 GMT

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சேர்ந்தமரம் கிராமத்தில் சேகரிப்பப்படும் குப்பைகள் சேர்ந்தமரம் மற்றும் ஆண்டிநாடாரூர் மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டில் கொட்டப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்