பெங்களூரு பசவனகுடியில் முக்கிய சாலைகளில் குப்பை கழிவுகள் வீசப்பட்டு வருகின்றன. இதனால் அந்த சாலையோரங்களில் குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.