பெரம்பலூர் நகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட சாமியப்பா நகர் 2-வது குறுக்கு தெருவில் உள்ள வீடுகளில் முறையாக குப்பைகள் சேகரிக்கப்படுவதில்லை. இதனால் அந்த தெரு ஓரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அதனையும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அள்ளப்படுவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அள்ளுவதற்கும், தினசரி வீடுகளில் குப்பைகளை சேகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.