குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-09-06 14:49 GMT

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், கரட்டாம்பட்டி ஊராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட காவேரி நகர்-சிறுகாம்பூர் மெயின்ரோட்டில் உள்ள ரேஷன் கடை எதிர்புறம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டியில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்