சுகாதார சீர்கேடு

Update: 2022-09-05 10:55 GMT

நாகை பகுதி 25-வது வார்டில் உள்ள செம்மாரை கடைத்தெரு பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி அந்த பகுதிகளை கடந்து சென்று வருகின்றனர். மேலும், குப்பைகளில் இரை தேடி கால்நடைகளும் அதிகளவில் வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்