குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-05 10:30 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி மேம்பாலம் அருகே பழவத்தான்கட்டளை கிராமம் விவேகானந்தாநகர் பகுதி கிளை நூலகத்தின் பக்கவாட்டில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இவை முறையான பராமரிப்பின்றி இருப்பதால் குப்பைகள் அந்த பகுதி முழுவதும் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி அந்த பகுதியை கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்