குப்பைகளால் பிரச்சினை

Update: 2022-07-11 14:28 GMT

சென்னை திருவல்லிகேணி பார்த்தசாரதி கோவில் தெரு, நுழைவு வாயில் அருகே மூன்று நாட்களுக்கு முன்பு மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்டது. தூர்வாரிய குப்பைகள் மூட்டைகட்டி அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களாகவே இந்த பிர்ச்சினை நீடித்து வருகிறது. தற்போது மழை காலம் என்பதால் இந்த இடம் அசுத்தமாக காட்சியளிக்கிறது. எனவே மூட்டைகளை விரைந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்