தொற்று நோய்கள் பரவும் அபாயம்

Update: 2022-09-04 13:38 GMT

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன்காரணமாக அந்த பகுதிகள் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி மேற்கண்ட பகுதிகளை கடந்து செல்கின்றனர். மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்