ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் சாலையில் டீச்சர்ஸ் காலனி பஸ் ஸ்டாப் நேர் எதிரில் உள்ள வீதியில் இருபுறமும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதேபோல் இங்குள்ள தெருவிளக்குகளும் ஒளிர்வதில்லை. மேலும் இந்த ரோட்டில் ஒரு பெரிய குழி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றவும், தெருவிளக்குகள் ஒளிரவும், குழியை மூடவும் நடவடிக்கை எடுப்பார்களா?