நாகை மாவட்டம் திருமருகல் பகுதி கேதாரிமங்கலத்தில் முடிகொண்டான் ஆறு உள்ளது. இந்த ஆற்றுக்குள் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குப்பைகள் கொட்டப்படுவதால் ஆற்றின் தண்ணீர் மாசடைகிறது. அதுமட்டுமின்றி குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிகொண்டான் ஆற்றுக்குள் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா?