பன்றிகள் தொல்லை

Update: 2022-08-30 13:54 GMT

தஞ்சை விளார் சாலை பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதன்காரணமாக அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குப்பைகளை சாலைக்கு பன்றிகள் இழுத்துவந்துவிடுகின்றன. இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள் மூக்கை மூடியபடி நடந்து சென்று வருகின்றனர். இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்