மதுரை மாவட்டம் பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள பூங்கா முழுவதும் குப்பைகள் அதிக அளவில் சூழ்ந்துள்ளன. இதனால் இந்த பகுதி சுகாதார சீர்கேடுடன் காணப் படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே பூங்காவில் தேங்கிய குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.