சென்னை திருவான்மியூர் நேதாஜி நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகே உள்ள இடத்தில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் குப்பைகள் அதிகம் சேர்ந்து அந்த பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே குப்பைகளை அகற்றுவதற்கும் மேலும் இந்த பகுதியில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.