குப்பை கிடங்காக மாறிய ஏாி

Update: 2022-08-27 11:07 GMT

வடலூரில் அய்யன் ஏரி உள்ளது. பொதுமக்கள் குளிக்கவும், கால்நடைகளின் தாகத்தை தீர்க்கவும் இந்த ஏரி பயனுள்ளதாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த ஏரி குப்பை மற்றும் கழிவு கொட்டப்படும் இடமாக மாறி உள்ளது. ஆம், வடலூரில் உள்ள பல்வேறு கடைகள், இறைச்சி கடைகளில் இருந்து இரவு நேரத்தில் கழிவுகளை கொண்டு வந்து அய்யன் எரியில் கொட்டுகிறார்கள். அதுமட்டுமின்றி குப்பைகளும் அங்குதான் கொட்டப்படுகிறது. துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுகள் கொட்டுவதை தடுத்து, அய்யன் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும். 

மேலும் செய்திகள்