பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் நேருநகர், குளோபல் நகர், ரெங்காநகர் உள்ளிட்ட குடியிருப்புகளில் பலநூற்றுக்கணக்கானவர்கள் குடியிருந்துவருகிறோம். இப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் குப்பை தொட்டிகளை வைக்காததால், பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றும் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்களை காலியாக உள்ள வீட்டுமனைகளில் போட்டு செல்கின்றனர். இந்த குப்பைகளை தெருநாய்கள் கிளறி விட்டுசென்றுவிடுகின்றன. வாரக்கணக்கில் குப்பைகள் சேர்ந்து அப்பகுதில் நோய்ப்பரப்பும் நிலையில் காட்சி அளிக்கும் குப்பைகளை அவ்வப்போது அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.