குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-25 13:06 GMT
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் உள்ள பழமையான பெரிய சந்தை செயல்பட்டதால் சந்தைப்பேட்டை என்று பெயர் உருவானது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக சந்தை கடைகள் அமைக்க வேண்டிய இடங்களில் பேரூராட்சி குப்பைகளை கொட்டி நிரப்பியுள்ளதால், துர்நாற்றம் வீசுவதுடன் நூற்றுக்கணக்கான நாய்களும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. குப்பைக்கிடங்கை மாற்றுவதாக எழுதிக்கொடுத்த பேரூராட்சி நிர்வாகம் பல மாதங்களாக மாற்றாமல் மீண்டும், மீண்டும் குப்பைகளை கொட்டி சுகாதாரக் கேடு ஏற்படுத்தி வருகின்றனர். ஆகவே சந்தை திடலில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி மீண்டும் வாரச்சந்தையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்