பராமரிக்கப்படாத பூங்கா

Update: 2022-08-24 11:46 GMT
சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ள, இந்த மேம்பாலத்தின் அருகே பூங்கா அமைக்கப்பட்டு அந்த பகுதி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பகுதியில் பூங்காவை சரிவர பராமரிப்பு இல்லாததால் செடிகள் காய்ந்து உள்ளது. மேலும் இந்த இடத்தில் குப்பைகள் ஆங்காங்கே காணப்படுகிறது. அங்கு தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடனே நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூங்காவை பராமரித்து, குப்பைகளை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்