தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-08-24 11:30 GMT
கரூர் மாவட்டம், வாங்கப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியின் எதிரே குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் நேரில் சென்று அந்தப்பகுதியை பார்வையிட்டார். பின்னர் தூய்மை பணியாளர்கள் அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்