சுகாதார சீர்கேடு

Update: 2022-08-23 13:47 GMT

பேச்சிப்பாறை அணையில் இருந்து வரும் கோதையாறு இடது கரைக்கால்வாயில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுகின்றன. அதில் இறைச்சி கழிவுகள் போன்றவையும் வீசப்படுவதால் குலசேகரம் அருகே அரியாம்பகோடு மதகு பகுதியில் அவைகள் தேங்கி நிற்கின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், கால்வாயில் குளிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் மதகு பகுதியில் தேங்கி நிற்கும் குப்பைகளை அகற்றுவதுடன், குப்பைகள், இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்