திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி புதுத்தெரு கீழப்பாலம் சந்திப்பில் மழை நீர் வடிகால் மேலே போடப்பட்ட சிமெண்டு கற்கள் பெயர்ந்து கம்பிகள் நீட்டி உள்ளது . இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மழைக்காலம் தொடங்கும் முன்பே உடைந்த சிமெண்டு கற்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,மன்னார்குடி.