சென்னை விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் தெருவில் பஸ் நிறுத்தம் எதிரே டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டுவருகிறது. இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மதுபானக்கடை செயல்படுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் பெண்களும், குழந்தைகளும் அச்சத்துடனே கடந்துசெல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.