திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் ஏ.என்.குப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பள்ளி வளாகத்தில் தகுந்த பாதுகாப்பு வசதிகள் இல்லை. சுற்றுசுவரும் அமைக்கப்படாததால் பள்ளிக்குள் பாம்புகள் புகும் அவலம் நிகழ்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியை சுற்றி சுவர் எழுப்பி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.