தெருநாய் தொல்லை

Update: 2026-02-22 12:05 GMT

சென்னை மாதவரம், சாமி நகர் பகுதி ஏராளமான மக்கள் வசிக்கும் குடியிருப்பி பகுதி. இந்த பகுதியில் சாலையில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடனே கடந்துசெல்கின்றனர். மேலும் நாய்கள் குழந்தைகளை துரத்தி கடிக்க வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்