சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-02-22 12:04 GMT

சென்னை மேடவாக்கம் அடுத்த சித்தாலபாக்கம் கிராமம் வள்ளுவர் நகர் முதல் தெருவில் சமீப காலமாக சாலை சேதமடைந்து கற்கள் கொட்டியதுபோல காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு அளாகின்றனர். மேலும் பொதுமக்களும் சாலையில் நடந்து செல்ல சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்