காஞ்சீபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் பேரூராட்சி 2-வது வார்டு பிருந்தாவன் நகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடை தற்போதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரேஷன் கடை பயன்பாட்டுக்கு கொண்டுவர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.