செங்கல்பட்டு மாவட்டம் கீழ்கட்டளை, ஈச்சங்காடு சிக்னல் அருகே உள்ள 200 அடி சாலையில் சில மாதங்களாக மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட மாநகரட்சி துறை அதிகாரிகள் மின்விளக்குகளை சரிசெய்து தரவேண்டி அப்பகுதி மக்கள் எதிர் பார்க்கின்றனர்.