கோவை மாநகராட்சி 99-வது வார்டு பகுதியில் தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் பெரும்பாலான இடங்கள் இரவில் இருள் சூழ்ந்து கிடக்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் தைரியமாக வெளியே நடமாட முடியாத சூழல் உள்ளது. அத்துடன் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே ஒளிராத ெதருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.