பட்டுக்கோட்டை பாளையம் மேலத்தெரு மாதுரார் காலனியில் சேதமடைந்த மின்கம்பம் ஒன்று உள்ளது. சிமெண்டு காரைகள் பெயர்ந்து காட்சியளிக்கும் மின்கம்பம், எப்போது வேண்டுமானாலும், சரிந்து விழும் என்கிற ஆபத்தான நிலையில் உள்ளது. குடியிருப்பு பகுதி என்பதால், ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிதாக அமைத்து தரவேண்டும்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை.