காங்கயத்தில் உள்ள 8-வது வார்டு, காந்திநகரில் அரசமரத்து விநாயகர் கோவில் முன்புள்ள மின் கம்பத்தில் கடந்த 2 நாட்களாக மின்விளக்குகள் எரியாமல் காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளனர். மேலும அந்த மின் கம்பத்தில் பொறுத்தப்பட்டிருந்த மின்விளக்கு கம்பத்தில் இருந்து கழண்டு மின்கம்பிகளில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. இதனால் அந்த மின்விளக்கு கீேழ விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் கடந்து செல்கின்றனர். எனவே பேராபத்து ஏற்படும் முன்பு மின்விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஷோபனா, காங்கயம்.