பெரம்பலூர் மாவட்டம் ஆத்தூர் சாலையில் தாலுகா அலுவலகம் முதல் ஜமாலியா நகர் வரை சாலையின் மையத்தடுப்பில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக வரும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிப் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். விபத்துகளைத் தடுக்க ஜமாலியா நகர் அருகே பொது மயானம் மற்றும் எரிவாயு மயானங்களுக்கு இடைப்பட்ட பிரதான சாலையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.