தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் தெருநாய்கள் 24 மணி நேரமும் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் பணி முடித்து வீடு திரும்புவோர் மிகவும் அவதியடைகின்றனர். ேமலும் சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
-ராஜா, பாலக்கோடு.