திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானா பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே ஓடுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் இப்பகுதியில் விளையாடும் சிறுவர், சிறுமிகளை கடித்து குதறுகின்றன. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.