கடமலைக்குண்டுவில் இருந்து துரைச்சாமிபுரம் செல்லும் சாலையோரத்தில் வைக்கப்பட்ட இரவில் ஒளிரும் சோலார் மின்விளக்குகள், குவிலென்ஸ் கண்ணாடிகள் சேதமடைந்த நிலையில் இருக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மின்விளக்கு, குவிலென்ஸ் கண்ணாடியை விரைந்து சீரமைக்க வேண்டும்.