திண்டுக்கல் அருகே மதுரை நான்கு வழிச்சாலையில், தனியார் கலைக்கல்லூரி பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் நிறுத்தத்தில் இருக்கையில் அமர முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த இருக்கைகளை விரைந்து சீரமைக்க வேண்டும்.